ஜெ. அன்பழகன் , தி மு க வின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்று உதிர்ந்து விட்டது. என் செய்வது ? காலம் வலியது ஆயினும் காலத்தை கடந்தும் கழகம் பயணிக்கும்.
திடீர் பிள்ளையார் சதியின் மூலம் தி நகரை மதவெறியின் களமாக்கி தமிழகத்தை மதவெறியின் வேட்டைக்காடாக்கும் பாசிச சக்திகளின் சதியை முறியடித்து தமிழகம் அமைதிப பூங்காவாக திகழ கலைஞர் காரணமென்றால் அம் மகத்தான பணியில் கலைஞருக்கு வலது கரமாக நின்று அந்த பணியை நிறைவேற்ற துணை நின்றவர் இப்போது நம்மை விட்டு பிரிந்து சென்றிருக்கும் ஜெ. அன்பழகன் அவர்களின் தந்தை பழக்கடை ஜெயராமன் அவர்கள்.
அடுத்தமுறை தி நகருக்கு நீங்கள் துணியோ நகையோ வாங்க போனால் சென்னை சில்க்ஸ்க்கு எதிர்புறம் பாருங்கள். ஒரு சிறு பள்ளிவாசல் இருக்கும். 1970 ஆம் ஆண்டு அப்பகுதி முசுலீம் வணிகர்கள் தங்களுக்கு ஒரு வழிபாட்டு தலம் வேண்டுமென அந்த இடத்தை வாங்கி பள்ளிவாசல் கட்ட திட்டமிட்டிருந்தனர். காலியாக கிடந்த இடம் காவிகளின் கண்ணை உறுத்தியது.தட்டிவிட்டனர் சூதுமதியை , தீட்டினர் சதியை. திடீரென ஒருநாள் அதிகாலை மசூதி இடத்தில ஒரு சிறு குழிக்குள் ஒரு பிள்ளையார் சிலை கிடந்தது. பகுதியெங்கும் செய்தி காட்டுத்தீயாய் பரவியது. உஸ்மான் ரோட்டில் பிள்ளையார் சுயம்புவாக தோன்றி விட்டார் என்று வேறு யார் பரப்புவார்கள் ? காவிகள்தான். அப்பாவி இந்து மக்கள் திரண்டு வந்தனர் திடீர் பிள்ளையாரை காண.
மசூதி இடம் பறிபோய் விடுமோ என்ற அச்சம் முசுலீம்களிடம்.சில முசுலீம் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்களின் சொந்த முயற்சியில் பிள்ளையார் சிலையை அப்புறப்படுத்தி இடத்தை தக்க வைக்க களமிறங்கினால் கலவரம் ஆகி விடுமே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.முசுலிம்கள் தீர்வு தேடி ஓடினார்கள் உள்ளூர் தி மு க பிரமுகர் ஜெயராமனிடம்.
முதல்வர் கலைஞரிடம் எடுத்து சொன்னார் அவர்.புலனாய்வு துறையை முடுக்கி விட்டார் கலைஞர்.
திடீர் பிள்ளையார் சதியின் மூலம் தி நகரை மதவெறியின் களமாக்கி தமிழகத்தை மதவெறியின் வேட்டைக்காடாக்கும் பாசிச சக்திகளின் சதியை முறியடித்து தமிழகம் அமைதிப பூங்காவாக திகழ கலைஞர் காரணமென்றால் அம் மகத்தான பணியில் கலைஞருக்கு வலது கரமாக நின்று அந்த பணியை நிறைவேற்ற துணை நின்றவர் இப்போது நம்மை விட்டு பிரிந்து சென்றிருக்கும் ஜெ. அன்பழகன் அவர்களின் தந்தை பழக்கடை ஜெயராமன் அவர்கள்.
அடுத்தமுறை தி நகருக்கு நீங்கள் துணியோ நகையோ வாங்க போனால் சென்னை சில்க்ஸ்க்கு எதிர்புறம் பாருங்கள். ஒரு சிறு பள்ளிவாசல் இருக்கும். 1970 ஆம் ஆண்டு அப்பகுதி முசுலீம் வணிகர்கள் தங்களுக்கு ஒரு வழிபாட்டு தலம் வேண்டுமென அந்த இடத்தை வாங்கி பள்ளிவாசல் கட்ட திட்டமிட்டிருந்தனர். காலியாக கிடந்த இடம் காவிகளின் கண்ணை உறுத்தியது.தட்டிவிட்டனர் சூதுமதியை , தீட்டினர் சதியை. திடீரென ஒருநாள் அதிகாலை மசூதி இடத்தில ஒரு சிறு குழிக்குள் ஒரு பிள்ளையார் சிலை கிடந்தது. பகுதியெங்கும் செய்தி காட்டுத்தீயாய் பரவியது. உஸ்மான் ரோட்டில் பிள்ளையார் சுயம்புவாக தோன்றி விட்டார் என்று வேறு யார் பரப்புவார்கள் ? காவிகள்தான். அப்பாவி இந்து மக்கள் திரண்டு வந்தனர் திடீர் பிள்ளையாரை காண.
மசூதி இடம் பறிபோய் விடுமோ என்ற அச்சம் முசுலீம்களிடம்.சில முசுலீம் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்களின் சொந்த முயற்சியில் பிள்ளையார் சிலையை அப்புறப்படுத்தி இடத்தை தக்க வைக்க களமிறங்கினால் கலவரம் ஆகி விடுமே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.முசுலிம்கள் தீர்வு தேடி ஓடினார்கள் உள்ளூர் தி மு க பிரமுகர் ஜெயராமனிடம்.
முதல்வர் கலைஞரிடம் எடுத்து சொன்னார் அவர்.புலனாய்வு துறையை முடுக்கி விட்டார் கலைஞர்.
புலனாய்வுத்துறை வேகவேகமாக செயல்பட்டு, உண்மை விடயத்தை முகத்திரையைக் கிழித்து வெளியில் கொண்டு வந்தது. செல்வராஜ் என்ற தலைமை கான்ஸ்டபிள்தான் இந்தப் பிள்ளையார் பொம்மையை சைக்கிளில் கொண்டு வந்து சிறுகுழி தோண்டிப் புதைத்துள்ளார். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பருத்திக் கொட்டையும் வைக்கப்பட்டது. தண்ணீரில் பருத்திக் கொட்டை ஊறினால் அது ஊதிப் பெருத்து மேலே கிளம்பும் அல்லவா! ஆகா எவ்வளவுப் பெரிய யுக்தி- தந்திரம்! (இதன் பின்னணியில் அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினரான பார்ப்பனர் கே.எம்.சுப்பிரமணியன் இருந்தார்)
தியாகராயர் நகர் கல்தொட்டிப் பகுதியில் சிலைகள் செய்யும் கடை வைத்திருந்த மருதப்பிள்ளை என்பவரிடம் ரூ.71க்கு கான்ஸ்டபிள் செல்வராஜ் வாங்கியதும் அம்பலமாகி விட்டது.
பிறகென்ன? பிள்ளையார் சிலையை அரசே அப்புறப்படுத்துவது என முடிவானது. கலைஞர் தி நகரில் பழக்கடை ஜெயராமன் அவர்கள் ஏற்பாடு செய்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் அந்த முடிவை அறிவித்தார்.அலைகடலென திரண்டிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து வரவேற்றது அம்முடிவை.கலவரம் செய்ய காத்திருந்த காவிக்கும்பல் ஜெயராமன் திரட்டிக்காட்டிய மக்கள் சக்தியின் முன் சப்த நாடியும் ஒடுங்கிப்போய் வாலை சுருட்டிக்கொண்டு ஓடிப்போனது.
அவரது மகன்தான் இன்று கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள் பட்டினியால் செத்துவிட கூடாது என ஒன்றிணைவோம் வா திட்டத்தில் ஓடி ஓடி உழைத்து அதே கொரோனாவுக்கு தன் இன்னுயிரை பலியிட்டு மக்களின் உயிரை காத்துள்ளார்.
போய் வாருங்கள் அன்பழகன் , உங்கள் குடும்பத்திற்கு தமிழகமே நன்றிக்கடன் பட்டுள்ளது.