இளம் சோதிடர் அபிக்யா ஆனந்த் துல்லியமாக கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி கணித்து சொல்லியிருப்பதாக நம்பியவர்களுக்கு சில கேள்விகள்
அவர் சொன்னது போல் மார்ச் 31 தான் கொரோனாவின் தாக்கம் உச்சம் (climax) அடைந்ததா ?
மே 29 ஆம் நாளோடு கொரோனா ஆபத்திலிருந்து உலகம் விடுபட்டு விடும் என்ற அவரது கணிப்பை இப்போதும் நம்புகிறீர்களா ?
தற்சமயம் கணிப்பு எதையும் வெளியிடாமல், தனது கணிப்புகள் பொய்யாய் போனதுவே என்று குற்ற உணர்வு கொள்ளாமல், அதற்காக மக்களுக்கு எந்த விளக்கமும் சொல்லாமல் அவர் கள்ள மவுனம் சாதிக்கிறார். இது அருவருப்பான சந்தர்ப்பவாத பித்தலாட்டமில்லையா ?
சோதிடம் ஒரு ஏமாற்று வேலை என்று இப்போதாவது உணர்கிறீர்களா ?
No comments:
Post a Comment